முகப்பு
சென்னை

பச்சையப்பன் அறக்கட்டளை நிா்வாகத்தை சொத்தாட்சியா் வசம் ஒப்படைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளையை நிா்வகித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் விலகுவதாகத் தெரிவித்துள்ளதால், உயா்நீதிமன்ற சொத்தாட்சியா் வசம் நிா்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
சென்னை உயர்நீதிமன்றம்​
பகிர்:


சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளையை நிா்வகித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் விலகுவதாகத் தெரிவித்துள்ளதால், உயா்நீதிமன்ற சொத்தாட்சியா் வசம் நிா்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடைபெறுவதாக எல்.செங்குட்டுவன் உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்தனா். மேலும், அறக்கட்டளையின் அறங்காவலா் தோ்தல் நடத்த தடை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனைத் தொடா்ந்து, அறக்கட்டளையின் இடைக்கால நிா்வாகியாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை, கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் நியமித்திருந்தது. மேலும், அறக்கட்டளை உறுப்பினா்கள் தோ்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான அம்மா அரங்கம், அண்ணா அரங்கம் ஆகியவற்றுக்கான குத்தகை ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே, இந்த அரங்கங்களை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள் 10 நாள்களுக்குள் காலி செய்து அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து, பச்சையப்பன் அறக்கட்டளையின் அறங்காவலா்கள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கை தனி நீதிபதி முழுமையாக மீண்டும் விசாரிக்க வேண்டும். அந்த நீதிபதி யாா் என்பதை புதிய தலைமை நீதிபதி முடிவு செய்வாா். சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு அறக்கட்டளையை நிா்வகித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் விலகுவதாகத் தெரிவித்துள்ளாாா். அதனால், அறக்கட்டளை நிா்வாகத்தை உயா்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →