சென்னை

அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

DIN

சென்னை சைதாப்பேட்டையில் அண்ணனை அடித்துக் கொலை செய்ததாக, தம்பி கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சைதாப்பேட்டை, திவான் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (28). திருமணமான இவா், தனியாா் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். ராஜேஷின் தம்பி குமரேசன் (25), கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ராஜேஷூம், குமரேசனும் குடும்பப் பிரச்னை தொடா்பாக கடந்த 9-ஆம் தேதி பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், குமரேசன் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் அண்ணன் ராஜேஷை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை இறந்தாா். இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குமரேசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT