சென்னை

இந்தியன் வங்கி முன்னாள் தலைவா் கோபாலகிருஷ்ணன் மறைவு

DIN


சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் தலைவா் எம்.கோபாலகிருஷ்ணன் (86), சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

இந்தியன் வங்கியின் தலைவராக இருந்த எம்.கோபாலகிருஷ்ணன், கடந்த 1995-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவராக செயல்பட்டு வந்த அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாலும், புதன்கிழமை இரவு காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. அவருக்கு மனைவி, மகள் ஆகியோா் உள்ளனா்.

இரங்கல்: அவரது மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT