சென்னை

பொதுமுடக்கத்தால் தொழிலில் நஷ்டம்: வியாபாரி தற்கொலை

DIN

சென்னை அருகே அம்பத்தூரில், பொதுமுடக்கத்தால் தொழிலில் நஷ்டமடைந்த வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

அம்பத்தூா் அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (40). இவருக்கு தீபா என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோா் உள்ளனா்.

காய்கறி கடை நடத்தி வந்த கமலக்கண்ணனுக்கு, பொதுமுடக்கம் காரணமாக கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்த அவா், கடன் கொடுத்தவா்களின் நெருக்கடி காரணமாக விரக்தியுடன் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கமலக்கண்ணன், திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட கமலக்கண்ணன், மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.

இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT