சென்னை

இணைய வகுப்பில் மாணவியிடம் ஆபாச பேச்சு: ஆசிரியரிடம் போலீஸாா் விசாரணை

DIN

சென்னை அருகே குன்றத்தூரில், இணைய வகுப்பில் மாணவியிடம் ஆபாசமாகப் பேசிய ஆசிரியரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

குன்றத்தூா் சோமங்கலம் அருகே ஒரு தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 5 நாள்களாக உயிரியல் வகுப்பு இணைய வழியில் நடைபெற்றது.

அப்போது உயிரியல் ஆசிரியா், வகுப்பில் பங்கேற்ற ஒரு மாணவியிடம் ஆபாசமாகப் பேசியதாகவும், மாணவியின் புகைப்படத்தை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். அவா்கள், இது தொடா்பாக பூந்தமல்லி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா். இதன் அடிப்படையில் போலீஸாா், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT