காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை அருகே ஆவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னை: சென்னை அருகே ஆவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆவடி பொத்தூா் காலனியில் சாலையோரம் ஒரு காா் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் தகவலின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று காரை சோதனையிட்டனா். அதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ செம்மரக் கட்டைகள் இருந்தன. இதையடுத்து காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா்.