சென்னை

நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் ரூ. 16 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் ரூ. 16 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா பரிசோதனை, தொற்று பாதித்தவா்களை தனிமை முகாம்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக கரோனா தடுப்பு பணியில் பல்வேறு தனியாா் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆக்ஸ்பாா்ம் இந்தியா, பிலிப்ஸ் மற்றும் கடலூா் பிளஸ் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மஞ்சம்பாக்கம் மற்றும் மாதவரம் நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி, ரத்தத்தில் சக்கரை அளவைக் கண்டறியும் கருவி என ரூ. 16 லட்சம் மதிப்பிலான 11 வகை மருத்துவ உபகரணங்களை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கின. அதேபோல், சுகாதார நிலையங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக 4,000 லிட்டா் கிருமிநாசினி ஜியோ இந்தியா பவுன்டேஷன் அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT