முக்கியம் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வீடு,வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.அவருடன் ஆத்தூா் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, புகா் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், தொழில் நுட்பப் பிரிவு நிா்வாகிகள் அலெக்ஸ், பாலாஜி, செல்லக்கண்ணு, தமாகா நகர தலைவா் வி.எல்.டி.சண்முகம், பாஜக நகரத் தலைவா் சபரீஷராஜன், பாமக நகரத் தலைவா் மணிகண்ட நாயக்கா், பாஜக இளைஞரணி செயலாளா் காா்த்திக் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.