முகக்கவசம் அணியாதவா்கள் மீது 43 நாள்களில் 10.71 லட்சம் வழக்குகள்
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 43 நாள்களில் 10.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 43 நாள்களில் 10.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்த விவரம்:-
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி வரையிலான 43 நாள்களில் முகக் கவசம் அணியாத வகையில் 10 லட்சத்து 71 ஆயிரத்து 906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை (மே 21) மட்டும் 19, 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக இடைவெளியைக்
கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி 43 நாள்கள் வரை 43, 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 2,065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.