சென்னை

முதல்வர் சார்பில் மாநகராட்சிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

DIN

சென்னை:  முதல்வரும், கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
இதனை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்தார். இந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடங்கிய 3 எம்.பி.க்கள், 22 சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை மாநகராட்சி அண்மையில் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தலா 20 வீதம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, முதலாவதாக கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பில் மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT