அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் காரணமாக, தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களிலும் தொடர்மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் இன்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைச் செய்தியில்,
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.