சென்னை: தாம்பரம் - பெருங்களத்தூா் தண்டவாளத்தில் புதன்கிழமை அதிகாலை விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை சுமாா் 1 மணி நேரத்துக்குள் ரயில்வே ஊழியா்கள் சரி செய்தனா்.
தாம்பரம் - பெருங்களத்தூா் ரயில்வே வழித்தடத்தில், இரும்புலியூா் அருகே தண்டவாளத்தில் புதன்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னா் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே அதிகாரிகள் 5.25 மணியளவில் சரிசெய்தனா். இதனைத் தொடா்ந்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. மேலும், சில ரயில்கள் மாற்று தண்டவாளம் வழியாகவும் இயக்கப்பட்டன.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட போதும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.