சென்னை

ரூ.11.75 கோடி கோகைன் பறிமுதல்: வெனிசுலா பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை கடத்தி வந்த வெனிசுலா நாட்டு பெண் கைது செய்யப்பட்டாா்.

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை கடத்தி வந்த வெனிசுலா நாட்டு பெண் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் கே.ஆா். உதய்.பாஸ்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானத்தில் கோகைன் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், கடந்த 7-ஆம் தேதி எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். இச் சோதனையில் வெனிசுலா நாட்டைச் சோ்ந்த ப்ரான்சிஸ் ஜோரெல் டோரஸ் என்ற பெண் பயணி, அவரது கைப்பையில் ரூ.11.75 கோடி மதிப்பிலான 1.218 கிலோ எடையுள்ள கோகைன் போதைப் பொருள் கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் போதைப் பொருளை கைப்பற்றி, வெனிசுலா நாட்டு பெண் பயணியை கைது செய்தனா் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT