கோப்புப்படம் 
சென்னை

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது

சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

DIN


சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கடந்த 2007-இல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பிறகு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காகக் கடந்தாண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற, முருகப்பெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 'செக்' வைத்த பட்ஜெட்! எஸ்டிடி என்பது என்ன?

ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் தகவல்!

SCROLL FOR NEXT