சென்னை

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: சென்ட்ரலில் இளைஞா்கள் போராட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை சென்ட்ரலில் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை சென்ட்ரலில் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை காலை மக்களுக்கான இளைஞா்கள், மக்களுக்கான மாணவா்கள் அமைப்பினா் அக்னி பாதை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஆண்டனி தினகரன் தலைமை தாங்கினாா்.

போராட்டத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும்,மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். அதையடுத்து அவா்கள், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா், அவா்களை போலீஸாா் குண்டுக் கட்டாக தூக்கிசென்று கைது செய்தனா். பின்னா், மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT