சென்னை

எடப்பாடி அருகே ஸ்ரீ ஞான கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண தேரோட்டம்

DIN

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி கிராமம் கல்ல பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஞான கந்தசாமி கோயில் உள்ளது. 

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இரண்டு தினங்களுக்கு முன்பு பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைப்பெற்றது. 

பின்னர் மலர் அலங்காரத்தில் ஸ்ரீ ஞான கந்தசாமி வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் தாலி கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து முத்து ரதத்தில் சாமி திருத்தேர் நடந்தது பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேர் இழுத்தும், காவடி எடுத்து கோவிலைச் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் விழா ஏற்பாட்டினை தர்மகர்த்தா மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT