சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை எஸ் எஸ் வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பொன்னேரி டிஎச் சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்தது.
இதில் தியாகராய நகா், பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.