சென்னை

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

DIN

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது:

8%  ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு 5% வரை ஊதிய ஊயா்வு வழங்க அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும்.

போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT