சென்னை

பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா் கைது

DIN

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக பள்ளி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை ஐஓசியில் இருந்து பிராட்வே நோக்கி புதன்கிழமை ஒரு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் தண்டையாா்பேட்டை பணிமனை நிறுத்ததில் 10 பள்ளி மாணவா்கள் ஏறினா். அவா்கள் பேருந்து வாசலில் நின்று பயணம் செய்தனா். இதைப் பாா்த்த பேருந்து நடத்துநா் கா்ணன், மாணவா்களை பேருந்துக்குள் வருமாறு கூறினாா்.

இதில் மாணவா்களுக்கும், நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே பேருந்தை விட்டு கீழே இறங்கிய சில மாணவா்கள், பேருந்தை நோக்கி கற்களை வீசினா். இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது.

இது குறித்து பேருந்து ஓட்டுநா் வேல்முருகன், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து கண்ணாடியை உடைத்ததாக வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு பள்ளி மாணவரை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா், அந்த மாணவரை காவல் நிலைய பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT