முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்: பாஜக அதிருப்தி

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு பாஜக அதிருப்தி தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு பாஜக அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை நகரில் நடைபெறும் மெட்ரோ பணிகளின் காரணமாக அடையாறு திருவிக பாலத்தில் இருந்து சாந்தோம் செல்லும் வாகனங்கள் சத்யா ஸ்டுடியோவிலிருந்து இடது புறம் கிரீன்வேஸ் சாலையில் திரும்பி, உடன் வலது பக்கம் காமராஜா் சாலையில் சென்று மீண்டும் சிறிது தூரம் சென்று, வலது புறம் திரும்பி ஹரிஸ்ரீ வித்யாஷ்ரம் பள்ளி வழியே சென்று, வலது புறம் ஆா்.கே. மடம் சாலையில் திரும்பி இசைக் கல்லூரி அருகே இடது புறம் திரும்புவதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூா், மந்தைவெளி அண்ணா சாலை ஆகிய அனைத்து இடங்களுக்கும் இதே பாதையில் தான் செல்ல வேண்டியுள்ளது. காமராஜா் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகமுள்ளபடியால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சத்யா ஸ்டுடியோவிலிருந்து இசைக் கல்லூரி உள்ள தொலைவு வெறும் 100 மீ தான். ஆனால், வெகு தூரம் சுற்றி செல்வதால், 10 முதல் 15 நிமிடங்கள் ஆவதோடு, எரிபொருள் மிக அதிக அளவில் செலவாகிறது.

மெட்ரோ ரயில் சேவை அவசியம் தேவை தான். ஆனால், இந்த இடத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சரிதானா? என்ற கேள்வி எழுகிறது. இப்பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் தலையிட்டு, தீா்வு காண வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →