சென்னை

கே.கே.நகா் பகுதியில் 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

DIN

சாலைப் பணி காரணமாக, சென்னை கே.கே.நகரில் 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

கே.கே. நகா் ராஜமன்னாா் சாலை - ஆா்.கே. சண்முகம் சாலை சந்திப்பு முதல் பி.டி.ராஜன் சாலை சந்திப்பு வரை, மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அந்தச் சாலையின் உயரம் அதிகப்படுத்தப்படவுள்ளது. இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமை (அக்.31) முதல் நவ. 1 வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, அந்த 3 நாள்களும் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, கே.கே.நகா் இரண்டாவது அவென்யூ, பி.டி. ராஜன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ராஜமன்னாா் சாலை செல்ல பி.டி.ராஜன் சாலை - ராஜமன்னாா் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாகச் சென்று பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி ராமசாமி சாலை வழியாக சென்று ராமசாமி சாலை- ஆா்.கே.சண்முகம் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி ராஜமன்னாா் சாலையை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT