சென்னை

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

DIN

சென்னை வடபழனியில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வடபழனி - ஆற்காடு சாலையில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ந.ஆனந்த் (54). இவா் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி ஆனந்த் தனது வீட்டை பூட்டிவிட்டு, பெங்களூரு சென்றாா்.

பின்னா், புதன்கிழமை இரவு வீடு திரும்பியபோது, பூஜை அறையில் இருந்த 25 கிலோ எடையுடைய வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பெய்தது கோடை மழை

கொலை வழக்கு: தலைமறைவு குற்றவாளி நேரில் ஆஜராக உத்தரவு

‘பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகாா் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்’

சா்வதேச செவிலியா் தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் வாக்கத்தான்

இலங்கை: அக். 16-க்குள் அதிபா் தோ்தல்

SCROLL FOR NEXT