சென்னை விமான நிலையம் செல்வோருக்கு கூடுதல் மகிழ்ச்சி 
சென்னை

சென்னை விமான நிலையம் செல்வோருக்கு கூடுதல் மகிழ்ச்சி

சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.21) முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.21) முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படுகிறது. இதன் மூலம் விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க வழிவகை செய்யப்படும். தகவல் பரிமாற்றம், பிரச்னைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு, உரிய தீா்வுகளை வழங்குதல் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.

மேலும், விமான நிலையம் மற்றும் விமானப்பாதை போன்றவற்றை மேம்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கதவுகள் மற்றும் முனையங்களை முறையாகப் பயன்படுத்துதல், பயணிகள் வாகனங்களுக்காகக் காத்திருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைத்தல்,

எரிபொருள் சேமிப்பு மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்,

விமான சேவைகளின் முன்னறிவிப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் இந்த கூட்டுக்குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், விமான நிலையத்தில் ஏற்படும் காலதாமதம் குறைக்கப்படும், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பது இருக்காது, விமானங்கள் சென்று திரும்பும் கால அவகாசம் குறைவது, பயணிகளின் பயண அனுபவம் சிறப்பானதாக மாறும் என்று கூறப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும் ஏற்கனவே தனியார் விமான நிலையங்களில் இருக்கின்றன.

ஒருங்கிணைந்த கூட்டமைப்பு குழுவினர், தகவல்களை உடனடியாகப் பரிமாறிக் கொண்டு அதற்கேற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சீரமைப்பர். இதனால் ஒரு சிக்கல் நேர்ந்த உடனே அது சரிசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

வரும் மாதங்களில் சென்னையில் ஒரு மணி நேரத்துக்கு இதுவரை 35 விமானங்கள் போக்குவரத்தில் இருக்கும் என்ற நிலை மாறி 45 விமானங்கள் என அதிகரிக்கும் போது நேரிடும் நெரிசல் குறைக்க இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT