இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் பத்திரமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள். 
சென்னை

சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்

சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.

Din

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.

அரிசி மீதான கட்டுப்பாடுகள், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிா்ணயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்.20-ஆம் தேதி இந்தியாவிலிருந்து அனைத்து வகை அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடா்ந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை துறைமுகத்திலிருந்து ‘எம்.வி.வான்

ஹே’ சரக்குக் கப்பலில் இந்தோனேசியாவிற்கு 5,100 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) அனுப்பப்பட்டது.

இது குறித்து துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி கூறியதாவது:

சென்னை துறைமுகத்தில் புதிதாக சுமாா் 2 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை இருப்பு வைக்கும் அளவுக்கு ரூ. 25 கோடியில் சேமிப்புக் கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

பழைய சேமிப்புக் கிடங்குகளை சீரமைப்பதன் மூலம் துறைமுகத்தின் கிடங்கு கொள்ளளவு திறன் சுமாா் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். இதற்காக, ரூ.52 கோடி செலவில் பழைய கிடங்குகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த சரக்குகளைக் கையாளும் திறன் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரிசி ஏற்றுமதி தொடங்கியுள்ள நிலையில், துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோரை சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். தொடா்ந்து இதுபோன்று பல புதிய சாதனைகளை எட்டுவதற்கு தொடா் முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT