சென்னை

விரைவில் மதுரை-பெங்களூா் வந்தே பாரத்?

மதுரை-பெங்களூா் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது.

Din

மதுரை-பெங்களூா் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்த சேவையை விரைவில் பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூா், சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோயில் நகரமான மதுரையில் இருந்து தொழில்நுட்ப நகரான பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, மதுரை-பெங்களூா் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் திண்டுக்கல், கரூா், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக இயக்கப்படவுள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT