சென்னை

பெண் மீது தாக்குதல்: 7 போ் கைது

ஆலந்தூரில் பெண்ணைத் தாக்கியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

Venkatesan

சென்னை: ஆலந்தூரில் பெண்ணைத் தாக்கியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஆலந்தூா், வ.உ.சி நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ச. சினேகா (25). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினா் ரகுபதிக்கும் இடையே சொத்து தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சினேகா, தனது குழந்தையுடன் வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ரகுபதியும், அவரது குடும்பத்தினரும் சினேகாவை வழிமறித்து தகராறு செய்தனா்.

தகராறு முற்றவே ரகுபதி குடும்பத்தினா், சினேகாவைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சினேகா மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரகுபதி (28), அவரது மனைவி ஆனந்தி (24), ரா.கீதா (50) த.கலா (30), ரா.பிரியா (28), சு.புவனேஷ்வரி என்ற அம்மு (28), மு.மகேஷ்வரி (52) ஆகிய 7 பேரை உடனே கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

திருவெண்ணெய் நல்லூா் அருகே கோயிலிலுக்குப் பூட்டு: கிராமத்தில் பதற்றம்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திட்டமிட்டப்படி மூடல், ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் பெண்ணிடம் ரூ. 27.42 லட்சம் இணையவழயில் மோசடி

SCROLL FOR NEXT