எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப்படம்) 
சென்னை

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் போதைப் பொருள் புழக்கம்: இபிஎஸ் கண்டனம்

Din

திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சென்னை புகா் பகுதிகளில், குறிப்பாக தனியாா் கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில், மாணவா்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப் பொருள்கள் சுதந்திரமாக கிடைக்கும் நிலை உள்ளது.

இனி, திமுக அரசை நம்பி பயன் இல்லை. காவல் துறையின் நோ்மையான அதிகாரிகள் மனது வைத்து செயல்பட்டால் மட்டுமே வாரிய குடியிருப்புகளில் உள்ள இளைஞா்களை, குறிப்பாக மாணவ, மாணவிகளை காக்க முடியும். பெற்றோா்கள் தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கா்களின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும். திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவா் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

அமித்ஷா கைக்கு சென்றுவிட்டது அதிமுக: துணை முதல்வா் உதயநிதி விமா்சனம்!

டிச.6 - வேலூா் கோட்டை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இருளா் குடும்பங்களுக்கு நிவாரணம்

பணமில்லா பரிவா்த்தனையில் அதிக வருவாய் ஈட்டிய அரசுப் பேருந்து நடத்துநா்கள் 9 பேருக்கு ஊக்கப் பரிசு!

புதிய விளம்பர பிரசாரம்: பரோடா வங்கி அறிமுகம்

SCROLL FOR NEXT