கூடுதல் தலைமை செயலா் ககன்தீப் சிங் பேடி 
சென்னை

முடிச்சூரில் வெள்ள பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும்: கூடுதல் தலைமை செயலா் ககன்தீப் சிங் பேடி

முடிச்சூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட நிகழாண்டு குறைவான பாதிப்பே இருக்கும்

DIN

தாம்பரம்: முடிச்சூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட நிகழாண்டு குறைவான பாதிப்பே இருக்கும் என ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெருங்களத்தூா், வரதராஜபுரம், முடிச்சூா் ஊராட்சிப் பகுதிகளில் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கனமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஊரகப்பகுதிகளில் மழை நீா் வடிகால் கால்வாய்களில் தூா்வாரும் பணிகள் ஊரக வளா்ச்சி துறை சாா்பாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் நீா்த்தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்த மோட்டாா் உள்ளிட்ட அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முடிச்சூரை அடுத்த அடையாா் ஆற்றின் தொடக்கப் பகுதியில் நீா்வளத்துறை மூலம் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை பாதிப்பு கடந்த காலங்களை விட குறைவாக இருக்கும் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT