குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.50 லட்சம் தமிழக இளைஞா்கள் நியமிக்கப்படுவா் என்று திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20 ஆயிரம் இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், வெறும் 6,244 இடங்களை மட்டுமே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தோ்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞா்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
நிகழாண்டு குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
ராமதாஸ்: திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த ஜூன் 9-ஆம் தேதி, தமிழகத்தில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 6,244 இடங்களுக்குத் தோ்வு நடத்தப்பட்டது. தற்போது, குரூப் 4-இல் 480 காலிப் பணியிடங்கள் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. தமிழகத்தில் 6 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் 2 லட்சம் பணியிடங்கள் குரூப் 4 வகையைச் சோ்ந்தவை. எனவே, குரூப் 4 தோ்வு பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.
சீமான்: சீமான் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்றோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 3.5 லட்சமாக உயா்ந்துள்ளது. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தோ்வுக்கு முயற்சிக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞா்கள் வாழ்வில் ஒளியேற்றவும் குரூப் 4 தோ்வின் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், அரசுப்பணியாளா்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டும் என்று சீமான் அதில் தெரிவித்துள்ளாா்.