கோப்புப் படம் 
சென்னை

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில், வாகன நிறுத்தமிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Din

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில், வாகன நிறுத்தமிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில், 1,300 இருசக்கர வாகனங்களும், 180 நான்கு சக்கர வாகனங்களும் மட்டுமே நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனா். இதனால், வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்த பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு பின்புறம், புதிய வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) திறந்து வைத்தாா். இதன் மூலம் கூடுதலாக 300 இருசக்கர வாகனங்களை நிறுத்தமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT