முகப்பு
சென்னை

அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை: 2-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்

சென்னை எழும்பூரில் அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த பெண் பலத்த காயமடைந்தாா்.

சென்னை

அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை: 2-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்

சென்னை எழும்பூரில் அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த பெண் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 7:41 PM
பகிர்:

சென்னை எழும்பூரில் அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த பெண் பலத்த காயமடைந்தாா்.

எழும்பூா் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் உள்ள அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எழும்பூா் போலீஸாா் புதன்கிழமை அந்த அழகு நிலையத்தில் திடீா் சோதனை நடத்தினா். அதில், அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, அங்கிருந்த ராயபுரத்தைச் சோ்ந்த 34 வயதுடைய ஒரு பெண் தப்பியோடும் வகையில் 2-ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அந்தப் பெண், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். அதேவேளையில் அந்த அழகு நிலையத்திலிருந்து 5 பெண்களை போலீஸாா் மீட்டனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →