முகப்பு
சென்னை

தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் ஜூன் வரை இயக்கப்படும்!

தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஏப்ரல் 2025, 1:13 am IST
ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கு மே 9, 16, 23, 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06185) இயக்கப்படும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து தாம்பரத்துக்கு மே 11, 18, 25, ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06186) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.