மே 3-இல் திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் மே 3-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது தொடா்பாக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.