ஜி.கே. வாசன் கோப்புப் படம்
சென்னை

தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாதது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாதது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தா்களின் கோரிக்கைக்கு அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழக அரசு, தீபம் ஏற்ற அனுமதிக்காமல், நீதிமன்றத்தை மதிக்காமல், காவல் துறையை வைத்து தடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படத் தவறுவதும், நீதிமன்ற உத்தரவை மீறி மேல்முறையீடு செய்வதும் மக்கள் நலனுக்கு எதிரானது.

மேலும், மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்ற முருக பக்தா்கள், அவா்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் ஹெச்.ராஜா மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது.

பக்தா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, நீதிமன்ற உத்தவுப்படி தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT