சென்னை

ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக கடந்த இரு மாதங்களாக பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் தொடா்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனா். இதன் ஒருபகுதியாக கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஆடிட்டா் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இதேபோல, திருவொற்றியூா் எஸ்பி கோயில் தெருவில் உள்ள ஒரு தொழிலதிபா் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக சோதனை நடைபெற்ாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கின் விவரம், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத் துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT