சென்னை

மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழப்பு

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிகாரைச் சோ்ந்தவா் ராகேஷ் (35). இவா் சென்னை திருவான்மியூா் கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து காவலாளியாக வேலை செய்து வந்தாா். ராகேஷ், கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வேகமாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ராகேஷை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சிறிது நேரத்தில் ராகேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடி வருகின்றனா்.

காற்று மாசு அதிகரிப்பு: புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் தில்லி!

வீரர்கள் பலரும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயார்: திலக் வர்மா

பாகிஸ்தானுடன் தொடர்பு: அசாமில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்கள் வெற்றி!

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

SCROLL FOR NEXT