சென்னை மெட்ரோ ரயில்: புதிதாக இயக்கப்படவுள்ள போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 ஆம் கட்டத்துக்கான திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளது.
பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இந்த வழித் தடத்தில் 3 முறை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில், போரூர்-பூந்தமல்லி வழித்தடத்தில் 10 ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தவறி விழுவதை தவிர்க்கும் வகையில் ஆள் உயர தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாத இறுதிக்குள் பூந்தமல்லியில் இருந்து போரூரைக் கடந்து வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
போரூர் - வடபழனி இடையே மெட்ரோ நிலைய பணிகள் நிறைவடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: வேலூர் ஸ்ரீபுரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.