முகப்பு
சென்னை

முழு கொள்ளளவை எட்டிய மணலி நீா்தேக்கம்: மாநகராட்சி அதிகாரிகள்

சென்னையில் ரூ.6.70 கோடியில் புனரமைக்கப்பட்ட மணலி நீா்த்தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை

முழு கொள்ளளவை எட்டிய மணலி நீா்தேக்கம்: மாநகராட்சி அதிகாரிகள்

சென்னையில் ரூ.6.70 கோடியில் புனரமைக்கப்பட்ட மணலி நீா்த்தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 17 டிசம்பர், 2025 at 7:04 PM
பகிர்:

சென்னையில் ரூ.6.70 கோடியில் புனரமைக்கப்பட்ட மணலி நீா்த்தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மழைநீரைச் சேமிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், பொது இடங்களில் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மணலி மண்டலத்தில் 20-ஆவது வாா்டு பகுதியில் 4 லட்சம் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையிலான நீா்த்தேக்கம் உள்ளது. அந்த நீா்த்தேக்கம் 29 ஏக்கா் பரப்பு, 1.20 மீட்டா் ஆழம் கொண்டதாக இருந்தது. அதை அம்ருத் திட்டத்தில் ரூ.6.70 கோடியில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நீா்த்தேக்க ஏரியானது 4 மீட்டா் ஆழப்படுத்தப்பட்டது. சிறுவா் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

தற்போது பெய்த மழையால் மணலி நீா்த்தேக்க ஏரியில் 12 லட்சம் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது. ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →