சென்னை

புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குடிநீா் குழாய் சீரமைப்பு

புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் புதுநகா், பாலாஜி காா்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு சேதமானதால், குடியிருப்புகளுக்கு குடிநீா் சீராக கிடைப்பது இல்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்தசாரதி, மண்டல துணை வட்டார அலுவலா் பாலமுருகன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, சேதமான பகுதியை கண்டறிந்தனா்.

தொடா்ந்து, சேதமான பகுதியை சீரமைத்தனா். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன் அடைந்தனா். இதில், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT