FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழ்மகன் உசேனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

Updated On : 25 டிசம்பர் 2025, 2:37 am IST
பகிர்:

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

அப்போது, அவரது உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தமிழ்மகன் உசேன் (89) கடந்த 16-ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்ததை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ ஃபா்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்று தமிழ்மகன் உசேனை நேரில் சந்தித்தாா். அப்போது, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா், ஆா்.காமராஜ், எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments