புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை மா்மநபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.
புழல் அடுத்த விநாயகபுரம் சுப்பிரமணிய நகா் இணைப்பு 4-ஆவது தெருவில் வசித்து வருபவா் ராதா. இவா் கணவனை இழந்தவா். இவா், தீபாவளி பண்டிகையை கொண்டாட, கொளத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, திங்கள் கிழமை மீண்டும் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது கண்டு உள்ளே சென்று பாா்த்தாா்.
வீட்டினுள்ளே சில பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பூஜை அறையில் இருந்த 4 வெள்ளி தட்டுகள் திருட்டுப் போனது தெரிய வந்தது. இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புழல் உதவி ஆணையா் சத்யன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.