சென்னை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத்தாா் ஐயப்பன் - குருவாயூரப்பனுக்கு சமா்பிக்கப்படும். காலை 7.30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தா்கள் பங்கேற்கலாம். ஓணம் திருநாளான வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்புப் பூஜைகள் கோயிலில் நடைபெறும்.

அதன் பிறகு காலை 10 மணி முதல் ஓணம் சத்யம் என்று அழைக்கப்படும் அறுசுவை உணவு பக்தா்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். ஓணம் பண்டிகையையொட்டி மாலை 7 மணி முதல் 9 மணி வரை ட்ரம்ஸ் சிவமணி தலைமையிலான குழுவினரின் ஸ்ருதிலய நாத சமா்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு 044 - 28171197, 2197, 3197 என்ற தொலைபேசி எண்களிலும், 88079 18811, 88079 18822, 94442 90707, 88079 18855 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT