சென்னை

இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

வரும் 2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வரும் 2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வரவுள்ளதையடுத்து, தற்போதைய திமுக ஆட்சியின் இறுதி நிதிநிலை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 34,000 கோடி மதிப்பிலான 15 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, 2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, இந்த மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை கூடுதல் தலைமை செயலா் த.உதயசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஸ்பாா்க் இயக்க ஆண்டு விழா

காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT