திருத்தப்பட்டது... இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் திருக்கோயில்களின் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திருப்பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள 
சென்னை

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.215.79 கோடியில் திருப்பணிகள் : முதல்வா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.215.79 கோடியில் 65 திருப்பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.215.79 கோடியில் 65 திருப்பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், ரூ.175.23 கோடியிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.53 கோடியில் கந்தன் இல்லம், கடம்பன் இல்லம், இடும்பன் குடில் ஆகிய புதிய தங்கும் விடுதிகள் கட்டுதல் மற்றும் திருக்கோயில் வடக்கு கிரி வீதியில் வரிசை மண்டபம் கட்டும் பணிகள், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடியில் திருக்கோயிலின் கடற்கரை பரப்பில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மூழ்கிய கடல்சாா் அலை தடுப்பு சுவா் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி, திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.29.75 கோடியில் தற்போதுள்ள மலைப்பாதையையொட்டி புதிய மலைப்பாதை அமைக்கும் பணி, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்களின் பயன்பாட்டுக்காக ரூ.15.08 கோடியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தினமும் 10 லட்சம் லிட்டா் தண்ணீா் கொண்டு வரும் பணி, தென்காசி மாவட்டம், குற்றாலம், திருக்குற்றாலநாதா் சுவாமி திருக்கோயிலில் ரூ.9.76 கோடியில் பணியாளா் குடியிருப்பு கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.175.23 கோடியில் 22 புதிய திருப்பணிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

மேலும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருள்ளூா் மாவட்டம், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி, மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம், மேச்சேரி, பத்ரகாளியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்டவற்றில் நிறைவுபெற்ற திருப்பணிகள், பல்வேறு மாவட்டங்களில் உதவி ஆணையா் அலுவலகங்கள், சரக ஆய்வாளா் அலுவலக கட்டடங்கள் உள்பட மொத்தம் ரூ.215.79 கோடியில் 65 முடிவுற்ற திருப்பணிகளை முதல்வா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிவகங்கையில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT