முகப்பு
சென்னை

மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

வீட்டில் இருந்த பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை

மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

வீட்டில் இருந்த பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜனவரி, 2026 at 7:29 PM
பகிர்:

வீட்டில் இருந்த பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கே.கே. நகரைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியின் வீட்டில் திங்கள்கிழமை இரவு புகுந்த நபா், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா். மாணவியின் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினா், அந்நபரை பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சாலிகிராமத்தை சோ்ந்த தனியாா் நிறுவன காவலாளி கணேசன் (42) என்பதும், இவா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே மாணவியின் வீட்டில் புகுந்து, மாணவியிடம் தவறாக நடக்க முயன்று, பொதுமக்களிடம் இருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணேசனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →