முகப்பு
சென்னை

மெட்ரோ பணி: சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது தொடர்பாக...

Updated On : 28 ஜனவரி, 2026 at 6:12 AM
குடிநீர் (கோப்புப்படம்)
பகிர்:

மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் ஜன. 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜன. 31 காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Water Board has announced that water supply will be suspended for two days in Chennai due to metro construction work.

முழு கட்டுரையைப் படிக்க →