அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னையில் வரும் பிப்.4-இல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
அதிமுக பொதுச் செயலா், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.4-ஆம் தேதி (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு, மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.