பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்களின் வீடுகளில் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளைப் பெற்று அகற்றும் பணி நடைமுறையில் உள்ளது.
அதன்படி, இதுவரை 17 சனிக்கிழமைகளில் 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அகற்றப்பட்டு உள்ளன. சனிக்கிழமை (ஜன.31) ஒரு நாள் மட்டும் 100 பேரிடம் இருந்து 51.93 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று நவீன முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.