முகப்பு
சென்னை

விளிம்பு நிலை மக்களுக்கும் சிறப்பு உதவித் தொகை: இடது சாரிகள் வரவேற்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 2:59 AM
பெ.சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): நலிவுற்ற மக்களின் நியாயமான எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் ரூ. 2,000 உதவித் தொகை அரசின் சாா்பில் வங்கிக் கணக்கில் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும், அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகை பெற்று வரும் முதியோா், கைம்பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ. 2,000 வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

Advertisement