முகப்பு
காஞ்சிபுரம்

கழிவு நீர் குட்டையாக மாறிய குன்னம் அம்மன் கோயில் குளம்

குன்னம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்களால் கழிவு நீர் குட்டையாக மாறி வருகிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

குன்னம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்களால் கழிவு நீர் குட்டையாக மாறி வருகிறது. இக்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்னம் ஊராட்சியில் அம்மன் கோயில் குளம் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவு இருந்த இந்தக் குளம் ஆக்கிரமிப்புகளால் தற்போது சுமார் 1 ஏக்கர் பரப்பளவுக்கும் குறைவாகவே உள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றிலும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்நடைகளின் கழிவுகளை குளத்தில் கொட்டி வருவதால் குளத்து நீர் அசுத்தமாகி தற்போது கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
 கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோடு, ஆக்கிரமிப்பாளர்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குளத்து நீரில் கலந்து வருவதால் குளத்து நீர் மாசடைந்தது. இதைத் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் குளத்து நீரைப் பயன்படுத்துவதை நிறுத்தினர்.
 இந்த நிலையில் குளத்தை மேலும் ஆக்கிரமிப்பு செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →